“Clean Sri Lanka” திட்டத்தை முன்னிட்டு மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் “Clean Western Province” திட்டம் அரம்பமானது.
மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
பொது பஸ் தரிப்பிடங்கள் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களை சுத்திகரிக்கும் செயற்திட்டம் இன்று நடைபெற்றதுடன் இந்த திட்டம் 2025.02.03 இல் இருந்து 2025.02.09 வரையான ஒரு வார காலத்திற்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
மேல் மாகாணத்தின் அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
மாலம்பேயில் இன்று நடைபெற்ற பொது பஸ் தரிப்பிடம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளை சுத்திகரீக்கும் நிகழ்விற்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆர்யரத்ன, மேல் மாகாண சபையின் பிரதம செயலாளர் உள்ளிட்ட மேல் மாகாண சபையின் அரச ஊழியர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள்,தன்னார்வ ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் பங்களிப்பு வழங்கியதுடன் இதன்போது பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் காணப்பட்ட கழிவுப்பொருட்களை அகற்றுதல், பொது மலசல கூடங்களை சுத்தப்படுத்தல் மற்றும் சூழலை அழகு படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஆளுநரின் ஆலோசனைப்படி மேல் மாகாணம் பூராகவும் 5000 “Clean Sri Lanka” திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் அதன் ஒரு கட்டமாகவே இன்று மாலம்பே பிரதேசத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது.
திட்டமிட்டுள்ள சிரமமான வாரத்தின் பின்னர் தூய்மை மற்றும் கவர்ச்சியை தொடர்ந்தும் பேணுவதற்கு அனைத்து வாரங்களிலும் வெள்ளிக்கிழமை விசேட தினமாக பெயரிடப்பட்டுள்ளதுடன் அந்தத் தினத்தில் நாளாந்த கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சுத்திகரிப்பு பணிகள் இடம்பெற உள்ளன.
இது “Clean Sri Lanka” சிரமமான வாரத்தின் (2025.02.03 முதல் 2025.02.09 வரை) ஒரு பகுதியாக அமைவதுடன் மேல் மாகாணம் பூராகவும் தூய்மையான மற்றும் கவர்ச்சிகரமான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் இதற்கு மேலதிகமாக மேலும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.