மேல் மாகாண ஆளுநர் திரு ஹனீஃப் யூசுப் (12) இன்று கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆரய்ச்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தக் கூட்டம் கொழும்பு மாவட்ட செயலக பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுடன் இதன் போது கொழும்பு மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.