கவர்னர் அலுவலகம்

LATEST NEWS

கியூபாவின் தூதர் எச்.இ. ஆண்ட்ரேஸ் மார்செலோ கோன்சாலஸ் கரிடோ மற்றும் கியூபா தூதரகத்தின் செயலாளர் திருமதி மாரிபெல் டுவார்டே கோன்சாலஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

மேல்மாகாண ஆளுநர் திரு. ஹனிப் யூசுப் அவர்களுக்கும் , கியூபா தூதுவர் H. E. Andrés Marcelo González Garrido மற்றும் கியூபா தூதரகச் செயலாளர் திருமதி Maribel Duarte González ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நவம்பர் மாதம் 13ஆம் திகதி 11.00 மணியளவில் கொழும்பில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
 
இச் சந்திப்பில் மேல்மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் அதன் நிர்மாணத்திற்கான கண்ணோட்டம் குறித்தும், புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்தும், மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் பற்றி கியூபா தூதுவர் உள்ளிட்ட குழுவினருடன் கலந்தாலோசிக்கப்பட்டது.